விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இதில் அபி 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை என அறிந்து கொண்ட வெற்றிக்கு, சுடர் யாருடைய குழந்தை என சந்தேகம் வருகிறது. ஆனால் இது குறித்த உண்மையை அபி மற்றும் சுடர் சொல்ல மறுப்பதால், அபிக்கு எந்த ஊரில் குழந்தை பிறந்தது என்பதை தெரிந்து கொண்ட வெற்றி அங்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை அறிந்து கொண்ட கண்மணி கள்ளச்சாராயம் விற்றதாக கூறி போலீசில் வெற்றியை மாட்டிவிட்டு, அவர் சுடர் பற்றி தெரிந்து கொள்ள ராஜஸ்தான் செல்வதை தடுக்கிறார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெற்றி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய வீட்டுக்கு வருகின்றனர்.
சூர்யாவின் “கங்குவா” படத்தில் இணைந்த கேஜிஎப் பட வில்லன்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
ஆனால் அவர் வீட்டில் இல்லை என்பதை, போலீசார் அபிக்கு தகவல் கொடுக்கின்றனர். இதன் பிறகு அபிக்கு கால் செய்த கண்மணி சுடருக்கு யார் அம்மா என தெரிந்து கொள்ளத்தான், வெற்றி ராஜஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்ட அபி அதிர்ச்சியாகிறார். இதை வைத்து பார்க்கும்போது சுடர் பற்றிய உண்மையை வெற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அவரை தேடி செல்லும் அபி அவரை தடுக்க முயற்சி செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.