காதலை மறுத்த மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

0
காதலை மறுத்த மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

காதல் என்பது பொதுவான ஓன்று. காதலை யாராலும் தடுக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது. அனைத்து உயிர்களுக்குமே ஒருமுறையாவது காதல் கண்டிப்பாக மலரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் ஒரு தலை காதல் என்ற பெயரில் பல சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு அஸ்வினி என்ற பெண் சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்தார்.

தமிழக பயணிகள் கவனத்திற்கு.., இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.., வெளியான அறிவிப்பு!!!

அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினி கல்லூரிக்கு செல்லும் பொழுது பின் தொடர்ந்து உள்ளார். முதலில் அவரின் காதலை மறுத்த மாணவி நாளடைவில்  காதலை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் அவரது வீட்டார் சம்மதிக்காததால் அழகேசனிடம் இருந்து விலகி இருந்தார்.  இதைப் பொறுத்துக் கொள்ளாத அழகேசன் ஒரு படி மேலே சென்று அஸ்வினி வீட்டுக்குள் சென்று யாரும் இல்லாத பொழுது தாலி கட்டியுள்ளார்.

இதை ஏற்காத அஸ்வினி போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து அவர் அளித்த புகாரின் பெயரில் அழகேசன் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமினில் வெளியில் வந்த அழகேசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அழகேசனுக்கு, தற்போது ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here