கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர் குழந்தை, குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 14 வருடங்கள் சிறையில் இருந்த நிலையில், குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு மூலம், கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பில்கிஸ் பானு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி நடைபெற்ற விசாரணையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு உரிமை இல்லை எனக்கூறி விடுதலையை ரத்து செய்தனர். இந்நிலையில் நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளதால், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற கோரி, குற்றவாளிகள் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.