இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட இடங்களில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு இலவச பயண வசதி, மாணவர்களுக்கான கல்வி ஆணையம் அமைத்தல், மானிய விலையில் சிலிண்டர், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்றவை செய்து தருவதாக பல வாக்குறுதிகளை அளித்தனர்.
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க…, முழு விவரம் உள்ளே!!
தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதை ஒவ்வொன்றாக முதல்வர் ரேவந்த் ரெட்டி நிறைவேற்றி வருகிறார். அதன்படி தற்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் விவசாயிகளுக்கு உதவும் விவசாயிகள் ஆணையம் மற்றும் கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.