பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பல்வேறு விதமான முதலீடு திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும், ஒரு சிலவை அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, 1.5 லட்சம் வரை வரி சலுகை உள்ளிட்ட நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 அல்லது ரூ.3,000 அல்லது ரூ.5,000 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு காலத்திற்கு பிறகும், தொடர விரும்பினால் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டித்து முதலீடு செய்யலாம். முதிர்ச்சியின் பிறகு பகுதியளவு ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ளவை மொத்த தொகையாகவும் வழங்கப்படுகிறது.
அதேபோல் முழுத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்து வந்தால், முதிர்வின் போது வட்டியுடன் சேர்த்து ரூ.9,76,370 பெறலாம் என கூறப்படுகிறது. பயன்பெற விரும்புபவர்கள் அருகாமையில் உள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தில் PPF கணக்கைத் தொடங்கலாம்.