தமிழகத்தில் இப்போது பல்வேறு பகுதிகளில் ரயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் பராமரிப்பு காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் பராமரிப்பு பணிகள் மாலை 3:30 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் பராமரிப்பு காரணமாக தாம்பரம்-சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.