தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. கொரோனா பாதிப்பால் 1 ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வுகள்
தமிழகத்தில்10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் தொடங்கி ஏப்ரல் -லில் முடிவடையவிருந்த நேரத்தில் கடந்த 21 நாட்களாக 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து தேர்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனை ரத்து செய்வதற்கான ஆலோசனையை மேற்கொண்டது, இதனடிப்படையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொது தேர்வை மீண்டும் மே மாதம் பத்து நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறித்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் மாற்ற ஏற்பாடுகள் செய்யவும் அறிவித்துள்ளது
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |