கொரோனவிற்கு அடுத்த பிரச்சனையாக கிளம்பியுள்ளது வெட்டுக்கிளி படையெடுப்பு. தற்போது ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் குஜராத் பகுதியில் பயிர்களை நாசம் செய்து வந்தது.இந்நிலையில் அப்பகுதியினர் வெட்டுக்கிளிகளை சமைத்து சாப்பிட்டு வருகின்றன.
வெட்டுக்கிளி
இந்தியாவில் மத்திய பிரதேசமான குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற இடங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து பல பயிர்களை நாசம் செய்தது. இது பெரும் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
மேலும் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க அரசு பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது பல ஏக்கர் நிலங்களை நாசப்படுத்தியது. இது பெரும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் என ஐ.நா சபை ஏற்கவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
வெட்டுக்கிளி பிரியாணி
இப்படி உணவு பொருட்களை நாசப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளை ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இதனை சமைப்பதற்கு முன் அதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அதன் இறகுகள், கால்கள் ஆகியவற்றை எடுத்துவிட வேண்டும் என கூறுகின்றனர். மேலும் இது நன்கு சுவையாக இருப்பதுடன் புரதம் நிறைந்த உணவாக உள்ளது என கூறுகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |