இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிதமான வரவேற்பு உள்ளது. IPL 16 வது சீசன் இன்னும் சில தினங்களில் (மார்ச் 31) துவங்க உள்ளதால் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. இதன் முதல் போட்டியில் CSK vs குஜராத் டைட்டன்ஸ்க்கும் போட்டி நடைபெற இருப்பதால் இவ்விரு அணிகளின் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரின் போது விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் தற்போது ஐபிஎல் போட்டியில் RCB அணி மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. கடந்த சீசனில் அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்துள்ளதால் இம்முறை புதுவித உத்வேகத்துடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்றாற்போல் ஆல் ரவுண்டர்களாக உள்ள மேக்ஸ்வெல், ஹசரங்கா, டேவிட் விலே, சபாஸ் அகமது ஆகியோர்களும் பவுலிங்கில் மிரட்டும் சிராஜ், ஹசல்வுட், ஆகாஷ் தீப் என அனைத்து வீரர்களும் பார்முக்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் IPL போட்டிக்கு தயாராகும் விதமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் RCB அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர் டேவிட் விலேவும் கைகோர்த்துள்ளார். இப்படி RCB அணி வலுப்பெற்று வருவதால் ஸ்ரீ சாந்த் உள்ளிட்டோர் தெரிவித்தது படி IPL 16 வது சீசனை வென்று விடுமோ? என மற்ற அணி ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.