நீதிமன்ற தடையை மீறு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் தெலுங்கில் வெளியிடப்படுவதாக இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார்.
கதை திருட்டா..? ஹீரோ படம்..!
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்திருந்தார். இயக்குனர் போஸ்கோ பிரபு கதை திருட்டு சம்பந்தமாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் தடை..!
இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மாஸ்டர் படத்தில் விஜய் விக் வைத்திருக்கிறாரா..? பதில் சொல்கிறார் நடிகர் ஸ்ரீமன்..!
இதில் இந்த படத்தை வேறு மொழியில் வெளியிடவும், மொழிமாற்றம் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
தடையை மீறி ரிலீஸ்..!
இந்நிலையில், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 20 ம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
YouTube பார்த்து காதலி வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதலன் – உயிருக்கு போராடும் காதலி..!
தடையையும் மீறி திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |