குஜராத்தில் இன்று ரசாயன தொழிற்சாலை வெடித்ததில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலரின் உயிர்நிலை போராட்டத்தில் உள்ளது.
ரசாயன தொழிற்சாலை
குஜராத்தின் தஹேஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த ரசாயன தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
படுகாயம்
படுகாயம் அடைந்த அனைவரும் பரூச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசாயன தொழிற்சாலை வெடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அருகில் உள்ள கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை மேஜர் யாஷஸ்வி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த தொழிற்சாலையில் 15 வகையான ரசாயன பொருட்கள் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |