கரையைக் கடந்தது நிசார்கா புயல் – மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று..!

0

அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் என்கிற பகுதி அருகே கரையைக் கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிசார்கா புயல்:

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் இந்தியாவின் வடமேற்கு கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இது தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. சரியாக மும்பையின் மேற்கு பகுதியில் 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் எனும் பகுதியில் கரையைக்கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 138 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் புயல் தாக்கம் நடைபெற இருந்ததால் பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் முக்கிய புயல் பாதிக்கும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்டுப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புயல் கரையைக் கடக்க தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடலோர பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் மாலை நிசார்கா புயல் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

புயல் பாதிப்பு தொடங்குவதற்கு முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த காரணத்தால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here