கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆகஸ்ட் மத்தியில் கொரோனா 2வது அலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது நாடுகள் எங்கும் பரவி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நிலைகுலைய செய்துள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தற்போது அதிகமாக பரவி வருகிறது. முழு ஊரடங்கு இருந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மார்ச் 24 முதல் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இதன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மேலும் அரசு படிப்படியாக சில தளர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது ஜூன் 30 வரை நீடித்திருக்கும் இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய மணிலா அரசுகள் ஏற்படுத்தின. மேலும் இத்தனை நாள்கள் இல்லாமல் இந்த 12 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 386 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஆகஸ்ட் மத்தியில் கொரோனா 2-வது அலை தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகஸ்ட் மத்தியில் இந்தியாவில் 2.74 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படுவர். மேலும் ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு கடுமையாவதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.