ஆடம்பர ஹோட்டல் முழுவதும் புக்கிங் செய்து கொரோனாவுக்காக தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்தி கொண்ட செய்தி வைரலாகி வருகிறது.
தனிமைப்படுத்திய விதம்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதலே பெரும் தீர்வாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்திய விதம் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொரன் ஆடம்பர ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக ஜெர்மனி ஹோட்டல் ஒன்றை முழுவதுமாக புக்கிங் செய்துள்ளார்.
20 பெண்களுடன் புக்கிங்..!
அந்த ஹோட்டலுக்கு அவர் மட்டும் தனிமையாக செல்லவில்லை. அவருக்கு பணிவிடை செய்யும் வேலை ஆட்களையும் மற்றும் அத்துடன் 20 பெண்களையும் அழைத்து சென்றுள்ளார். இப்படி 20 பெண்களுடன் ஒரு ஹோட்டல் முழுவதையும் புக்கிங் செய்து கொரோனாவுக்காக தனிமைப்படுத்திய செய்தி வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |