இந்திய திரையுலகில் மன உளைச்சல் மற்றும் பிற காரணங்களால் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு சீரியல் நடிகையான ஸ்ராவணி ஆந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ராவணி
சீரியல் நடிகை ஸ்ராவணி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவர் தற்போது தெலுங்கில் சில சீரியல்களில் நடித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய் கிழமைதனது பெற்றோருடன் பேசிவிட்டு அறைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. அதனால் அவரின் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்பொழுது அவர் ஃபேனில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஐபிசி 306 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். காக்கிநாடாவை சேர்ந்த ஒருவர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரே இந்த இறப்புக்கு காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.