தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தன்னுடன் சமீப காலமாக தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அங்கு இதுவரை 1,38,395 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இரண்டாவது மாநில சட்டப்பேரவையின் ஆறாவது அமர்வுக்கு முன்னதாக தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அவரது பதிவில், “கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்த காரணத்தால் நான் பரிசோதனை செய்து கொண்டேன். முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் எனது உடல்நிலை நன்றாக உள்ளது, கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், கொரோனா சோதனை செய்யுங்கள் “என்று பதிவிட்டு உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 32,915 பேர் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 1,04,603 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 877 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.