தெலுங்கானா முதலமைச்சருக்கு திடீர் நுரையீரல் பிரச்சனை – மருத்துவமனையில் அனுமதி!!

0
telengana cm

தெலுங்கானா மாநிலத்தின் முதல் அமைச்சர் ஆர். சந்திரசேகர் ராவ் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது உடல்நல குறைவால் செகந்திராபாத்தில் உள்ள யசோதா தனியார் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஊடகத்திற்கு அளித்த தகவலின் படி அவருக்கு நுரையீரலில் வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதாக கூறப்படுகிறது. யசோதா மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ மற்றும் சி .டி ஸ்கேன் செய்யப்பட்டது.

முதல்வரின் தனிப்பட்ட மருத்துவர்களாகிய எம்.வி ராவ் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் நவநீத் சாகர் ரெட்டி மற்றும் இருதய நோய் நிபுணர் டாக்டர் பிரமோத் குமார் ஆகியோர் சிகிச்சை நடத்தினர் என்று கூறப்படுகிறது. முன்னதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here