பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறப்போகும் ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்யவும், தமிழக அரசு ஜல்லிக்கட்டிற்கான அனுமதியை ரத்து செய்யவும் பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது
ஜல்லிக்கட்டு ரத்து
மாட்டுப்பொங்கலன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய கோரி பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமாகும் என்றும் கூறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசு தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தது நினைவுகூரத்தக்கது.
WE WANT JALIKATTU என்ற ஹாஷ்டகுகள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்ட ஒன்றாக இருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து பீட்டா நிறுவனம் அதற்கு தடை கோர வலியுறுத்தியுள்ளது.