மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை தன்னிடம் செல்போன் மூலம் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த கிராம மக்கள் அவருக்கு வினோத தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள இண்டோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்ப்பவர் வைபவ் நாயக். அவருக்கு வயது 24. அவர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அந்த மாணவியை தன்னிடம் போனில் பேசவேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த மாணவிக்கு அவர் ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில் தன்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இது தவிர பாலியல் ரீதியாகவும் அந்த மாணவியை துன்புறுத்தியுள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிய வரவே அந்த கிராம மக்கள் அவருக்கு மொட்டை அடித்து, அவர் மேல் கருப்பு வண்ணத்தை பூசி ஊர் முழுவதும் சுற்றி வர வைத்துள்ளனர்.
தற்போது அந்த பள்ளி ஆசிரியர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளுக்கு இவ்வாறான தவறான செயல்கள் நடக்கிறது. தற்போது இந்த சம்பவமும் மக்களிடையே கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்