கொரோனா நோய்பரவல் எதிரொலி – தமிழகத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் திறப்பு??

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாளை முதல் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் கடை:

தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதில் மளிகை, காய்கறி போன்ற கடைகள் அனைத்தும் பகல் 12மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் இயங்குமா என்று குழப்பம் ஏற்பட்டது. காரணம் தமிழகத்தில் பகல் 12 மணி அளவில் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கும்.

தமிழக ஊரடங்கு எதிரொலி – பேருந்துகளில் இனி 50% பயணிகள் மட்டுமே அனுமதி!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே டாஸ்மாக் கடைகளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் 4 மணி நேர மட்டும் இயக்க உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here