தமிழக ஊரடங்கு எதிரொலி – பேருந்துகளில் இனி 50% பயணிகள் மட்டுமே அனுமதி!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது போக்குவரத்து கழகம் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்துத்துறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மக்களிடையே மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தமிழகத்தில் நாளை(மே 6) முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. அதில் காய்கறி கடைகள் போன்ற அத்யாவசிய கடைகள் அனைத்து மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் நாளை முதல் மாநகர பேருந்துகள் அனைத்தும் 50% பயணிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் பேருந்துகளில் பயணம் புரியும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here