சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிமையான பயணங்களை மேற்கொள்ள கூடுதலான சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கினாலும், பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் to திருநெல்வேலி, தாம்பரம் to நாகர்கோவில், எக்மோர் to நெல்லை, தாம்பரம் to மங்களூரு மற்றும் சென்னை to நெல்லை வந்தே பாரத் என கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 100 க்கும் மேல் தாண்டியது. இதனால் முன்பதிவு இல்லாத ஓரிரு பாசஞ்சர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.