தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நாளை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரோகிணிக்கு காத்திருக்கும்  பேராபத்து…,  விஜயாவுக்கு இனி  தான் சீன் காத்திருக்கு.., .., உண்மை வெளிவருமா?? சிறகடிக்க ஆசை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here