கேரளாவில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை, தமிழகத்தில் உள்ள மலையாள மக்கள் உள்ளிட்ட பலரும் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் நாளை (ஆகஸ்ட் 29) ஓணம் பண்டிகை சிறப்பிக்க உள்ளதால், தமிழகத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன் அடிப்படையில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நாளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!