தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ. 1,000 விநியோகம் செய்யப்படவுள்ளது.
நாளை முதல் விநியோகம்..!
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆதலால், தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1,000 விநியோகிக்கப்படும் என அறிவித்திருந்தது. ரேஷன் அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்காக சுமார் 1,882 கோடி ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை முதல் ரொக்கப் பணத்துடன் இந்த மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதத்தில் தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே பணம் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்து.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |