இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுள் மின்சாரமும் ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் மாதத்திற்கு ஒருமுறை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, அந்த பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள பகுதிகளை பார்ப்போம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சென்னையில் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை மற்றும் ஆவடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ஜி.பி.சந்து, மோகன்தாஸ் தெரு, காட்டூர், திருமுல்லைவாயில் மகளிர் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படும்.
சென்னை வாசிகளே.., இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.., கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்!!
இதேபோல் தருமபுரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நாகமரை, சிலுவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பாலாஜி நகர், பாரதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.