போலீஸ் எஸ்.ஐ தேர்வு தேதி மாற்றம் – தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்

0
Tamilnadu Police

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான தேதி முடிந்து பின்னர் தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆணையம்.

லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்

இத்தேர்வில் பங்கேற்க பொது பிரிவில் 1,42,448 பேரும், காவல் பணியில் இருந்து கொண்டு தேர்வு எழுத 17,561 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையில் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையானது,

காவல்துறை பணியில் இருப்பவா்களுக்கு 11-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எழுத்து தோ்வு 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோட்டூா்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரா்கள், இக் குழும இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ள தோ்வுக் கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் இம் மாதம் 13ம் தேதி நடைபெறும் எழுத்துத் தோ்வில் கலந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, கோட்டூா்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்த தேர்வர்கள் தவிா்த்து பிற விண்ணப்பதாரா்கள் அனைவருக்கும் இக்குழும இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ள தோ்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், குறிப்பிட்டுள்ள தோ்வு மையத்தில் எழுத்துத் தோ்வு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here