தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதன் தடுப்பு பணியில் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு ஓய்வு பெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என்று தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய ஆயுதப்படை வீரர்கள்:
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 25 பேர் இதுவரை உயிரிழந்து உள்ள நிலையில் 1,128 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 40 முதல் 50 வயது வரை இருக்கும் விருப்பம் உள்ளவர்கள் அவரவர் வசிக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களிலும், மாநகரங்களில் உள்ளோர் மாநகர ஆணையாளர் அலுவலகத்திலும் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |