தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பே போடப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று தான் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க அனுமதி அளித்துள்ளனர். மேலும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களிலும் பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த முகாம்களில் தடுப்பூசிகளை எப்படி பராமரிப்பது மற்றும் வழங்கும் விதம் என அனைத்தையும் பயிற்சி அளித்துள்ளனர். மேலும் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது. அது என்னவென்றால் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தமிழகம் தான் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அறிய முடிகிறது.
கோவிஷீல்டு தயாரிப்பு ‘சீரம்’ நிறுவனத்தில் தீ விபத்து- 5 பேர் பலியான பரிதாபம்!!
தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்:
தற்போது மக்களிடம் நம்பிக்கை வரவைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் முதலாவதாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதாக முடிவு செய்தனர். சில தினங்களுக்கு முன்பாகவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி போடவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.