பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் இருப்பதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கடந்த 20 ம் தேதி பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் நுரையீரலில் அவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பாதிப்புகள் உள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலையில் அவரது ஆக்சிஜன் அளவு 98 ஆக இருந்தது. அதிதீவிர நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவரது உடலில் ஆக்சிகன் அளவு 95 ஆக குறைந்திருக்கிறது.
தற்போது விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு அதிதீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பின்பு வரும் 27ம் தேதி அன்று பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகும் நிலையில் அவருக்கு உடலில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.