தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகம் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மருத்துவ கல்லூரி டீன்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ கல்லூரி:
தமிழகத்தில் மக்கள் மிக கடுமையாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளாகி வரும் நிலையில் அவர்களை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இறுதி ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் களமிறங்கி அயராது தங்களது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மருத்துவ கல்லூரி டீன்கள்:
மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் செயலாளராக வசந்தாமணி நியமனம் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணி நியமனம் செய்யப்பட்டார்.கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சாந்தி மலர் நியமனம் செய்யப்பட்டார்.சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாக சங்குமணி நியமனம் செய்யப்பட்டார்.மதுரை மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டார்.திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக முருகேசன் நியமனம் செய்யப்பட்டார்,சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி டீனாக வள்ளி சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சுகந்தி ராஜகுமாரி நியமனம் செய்யப்பட்டார்.