தனது மனைவிக்கு போன் செய்த போது ‘வேறு நபருடன் தொடர்பில் உள்ளார்’ என்று செல் போன் பிஸி டோன் வந்ததால் சந்தேகப்பட்ட கணவன் அந்த பெண்ணை கழுத்து அறுத்து கொன்றார்.
நீங்கள் பேச முயற்சிக்கும் நபர் வேற ஒருவரிடம் தொடர்பில் உள்ளார்:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (42) இவரது மனைவி உமா (33). இருவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் தற்போது 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.வாகனகளுக்கு சீட் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார் உமாவின் கணவர். தையல் கலையில் அனுபவம் பெற்றிருந்த உமா தனது வீட்டிலே அக்கம் பக்கத்தினருக்கு மற்றும் தெரிந்தவர்களுக்கு துணி தைத்து கொடுத்து வந்துள்ளார். இதனால் வெளி ஆட்கள் வீட்டிற்கு வந்து, சென்று உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனிடையே கடந்த சில மாதங்களாகவே மனைவி மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதனை சரிசெய்ய உமாவின் பெற்றோர் ரமேஷிற்கு ஈத்தங்காட்டில் வீடு கட்டி குடியமர்த்தியுள்ளனர். அங்கேயும் தனது தையல் தொழிலை உமா விடாமல் தொடர்ந்தார். இந்த நிலையில் ரமேஷ் தனது மனைவியின் செல்ஃபோனுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளும்போது அவர் ‘வேறு நபரிடம் தொடர்பில் உள்ளார்’ என்று வாய்ஸ் டோனில் பதி்ல் வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்த உமாவின் கழுத்தை தன் கையில் வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். உமாவின் சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகளை பார்த்த ரமேஷ் தனது பைக்கில் தப்பி சென்றார். இதை தொடர்ந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்