தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 4 மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கால் கொரோனா தொற்று குறையவில்லை. மேலும் இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா ஊரடங்கு காலத்தில் காற்று மாசு 70% குறைவு – ஐ.நா அறிக்கை..!
மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்தை அனுமதிப்பது, தொழில் துறையினருக்கு மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாளை (ஜூலை 30) மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த இரண்டு ஆலோசனைக் கூட்டங்களும் முடிவடைந்த பிறகு ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.