தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு, உயர்கல்வி குறித்த வழிகாட்டுதலை வழங்க “நான் முதல்வன்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி அரசு பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் 2வது மற்றும் 4வது புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கான பாடப்புத்தகம் அண்மையில் தயாரான நிலையில், தற்போது ஆகஸ்ட் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பாடவேளைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளவாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (CG Teacher Counsellor), மாணவர்களுக்கு வழிகாட்டு பாடத்திட்டங்களை முறையாக கற்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.