நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜூன் 1 இல் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து
இந்த கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தங்கள் வெளியாகி உள்ளன. தொற்று அதிகம் உள்ள இடங்களில் குறைவான பேருந்துகள் இயங்கப்படும்.
மேலும் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க அறிவிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பயண கட்டுப்பாடுகள்
விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தயார் படுத்தும் பணிகள் நடந்துகொண்டுள்ளன. மேலும் ஒரு பேருந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் பயணிக்க முடியும். ஒரு அதிக தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு பயணிக்கும்போது 1 பேருந்தில் 26 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.இதற்கு ஏற்ப இருக்கைகளும் வரிசை எண்களும் அமைக்கப்பட்டுள்ளது.
குறைவான பயணிகளோடு பேருந்தை இயக்குவதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர். இதனால், விரைவில் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |