தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளுக்கு மேலும் 2,570 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
செவிலியர்கள் பணியமர்ப்பு:
தமிழகத்தில் ஏற்கனவே அரசு சார்பில் 2,323 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு கொரோனா தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 2,570 செவிலியர்களை பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் அவர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவர்களுக்கு ஒப்பந்த நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும் அதனைப் பெற்றவுடன் 3 தினங்களுக்குள் பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |