உலகம் முழுவதையும் முடக்கி வைத்துள்ள கொரோனா வைரசால் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 40 லட்சத்தை நெருங்கி வரும் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்ற நிலையில் நாங்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சீன நிறுவனம் அறிவித்து உள்ளது.
மூன்றாவது நாடு:
ஏற்கனவே கொரோனா வைரஸிற்கு ஆன்டிபாடிகளை உருவாக்கி விட்டோம் என இஸ்ரேல் அறிவித்து இருந்தது. அதன் பிறகு இத்தாலி தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் செய்லபடும் சினாவாக் பையோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு நாங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து உள்ளது.
பிகோவாக் மருந்து:
சீன நிறுவனம் பிகோவாக் என்ற தடுப்பு மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி மூன்று வாரங்கள் கழித்து கொரோனா பாதிப்பிற்கு உட்படுத்தி உள்ளனர். அதன் பிறகு 1 வாரம் கழித்து குரங்குகளை சோதனை செய்து பார்த்த போது அவற்றின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் தடுப்பு மருந்து செலுத்தப்படாத குரங்குகள் தீவிர மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. இதனால் குரங்குகளின் இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்பட்டு உள்ளதாக சினாவாக் பையோடெக் நிறுவனம் அறிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |