சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிவு இல்லாமல் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரோ கபடி 2024: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்…, முழு விவரம் உள்ளே!!
எனவே இன்று (பிப்.22) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவும், வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல் நாளை (பிப்.23) தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.