தமிழ் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ஜொலித்தவர் தான் திரிஷா. தற்போது இவர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி, ஏ.வி ராஜு தவறாக பேசியதில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும் இதற்கு த்ரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் திரிஷா ஏ.வி. ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் தன்னைப்பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, 24 மணி நேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. ஏ.வி. ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் இனி மழைக்காலம் தான் போல? வானிலை மையம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!