புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றுடன் (பிப்ரவரி 21) இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகளை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள புனேரி பல்டன் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதைத்தொடர்ந்து 3வது மற்றும் 4வது இடங்களில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. மேலும் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் 5, 6 வது இடங்களில் உள்ளன. எனவே இனி வரும் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. இத்தொடரின் பிளே ஆப் சுற்றுகள் வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
PKL 2024 பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்:
புனேரி பல்டன்
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
தபாங் டெல்லி
குஜராத் ஜெயண்ட்ஸ்
ஹரியானா ஸ்டீலர்ஸ்
பாட்னா பைரேட்ஸ்