நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வருவதால் நிதி சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என பலரும் கவலை தெரிவித்து இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு அனைத்து வங்கிகளும் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக சார்-பதிவாளர் அலுவலகம் செயல்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து மார்ச் 30ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
2024 TANCET தேர்வு முடிவுகள்., அடுத்து என்ன? முழு விவரம் உள்ளே…