தமிழகத்தில் 700ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 69 பேருக்கு உறுதி..!

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று மேலும் ஒருவர் உயிர் இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்:

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 69ல் 63 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னையை சேர்ந்த 64 வயது பெண் இன்று கொரோனா வைரஸால் உயிர் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 690 பேரில் 621 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here