தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1937 பேர்
- இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 24 பேர்
- இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 94,781 பேர்
- வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 29,797 பேர்
- அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 36 பேர்
தமிழகத்தில் இன்று ஆறுதல் அளிக்கக்கூடிய தகவலாக இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 52 பேரில் 33 பேர் ஆண்கள் எனவும், 19 பேர் பெண்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
- சென்னை – 570 பேர்
- கோவை – 141 பேர்
- திருப்பூர் – 112 பேர்
- திண்டுக்கல் – 80 பேர்
- ஈரோடு – 70 பேர்
- மதுரை – 79 பேர்
- நெல்லை – 63 பேர்
- செங்கல்பட்டு – 58 பேர்
- நாமக்கல் – 59 பேர்
- திருச்சி – 51 பேர்
- திருவள்ளூர் – 53 பேர்
- தேனி – 43 பேர்
- நாகை – 44 பேர்
- கரூர் – 42 பேர்
- ராணிப்பேட்டை – 39 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |