இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 934 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,869 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாநில வாரியாக பாதிப்பு விபரம்:
- மஹாராஷ்டிரா – 8,590 பேர்
- குஜராத் – 3,548 பேர்
- டில்லி – 3,108 பேர்
- ராஜஸ்தான் – 2,261 பேர்
- மத்திய பிரதேசம் – 2,168 பேர்
- உத்தர பிரதேசம் – 1,955 பேர்
- தமிழகம் – 1,937 பேர்
- ஆந்திரா – 1,183 பேர்
- தெலுங்கானா – 1,004 பேர்
- மேற்கு வங்கம் – 697 பேர்
- காஷ்மீர் – 546 பேர்
- கர்நாடகா – 512 பேர்
- கேரளா – 481 பேர்
- பீஹார் – 345 பேர்
- பஞ்சாப் – 313 பேர்
- ஹரியானா – 296 பேர்
- ஒடிசா – 118 பேர்
- ஜார்க்கண்ட் – 82 பேர்
- உத்தரகாண்ட் – 51 பேர்
- ஹிமாச்சல பிரதேசம் – 40 பேர்
- சண்டிகர் – 40 பேர்
- சத்தீஸ்கர் – 37 பேர்
- அசாம் – 36 பேர்
- அந்தமான் – 33 பேர்
- லடாக் – 20 பேர்
- மேகாலயா- 12 பேர்
- புதுச்சேரி- 09 பேர்
- கோவா- 07 பேர்
- திரிபுரா- 02 பேர்
- மணிப்பூர் – 02 பேர்
- அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
- மிசோரம் – 01 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |