தமிழகத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 13 பேர் பலி..!

0

கொரோனா என்னும் தொற்று நோய் ஒவ்வொரு நாடாகப் பரவி இன்றைக்கு நம் அன்றாட வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது.  தாக்கம் குறையாமல் இன்னும் வேகமாக பரவி தான் வருகிறது. கொரோனா பரவல் எப்போதுதான் குறையும் என்பதே எல்லோருடைய கேள்வியும். தமிழத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் 3 ஆம் நாளாக கொரோன பாதிப்பு 1000த்தை தாண்டியுள்ளது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1036 பேர் தமிழகத்தில் இருந்தவர்கள். மீதமுள்ள 55 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24586 ஆக அதிகரித்துள்ளது.இன்று 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 536 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13706உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது இன்றுவரை 10680பேர் சிகிச்சையில் உள்ளார்களா எனவும்  தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here