தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்து உள்ள காரணத்தால், மொத்த உயிரிழப்புகள் 576 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 27,624 ஆக உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஊரடங்கு எங்களுக்கு இனி தேவை இல்லை – மாநில முதல்வர் பேட்டி…!
தமிழகத்தில் இதுவரை 30,961 ஆண்கள், 19,212 பெண்கள் மற்றும் 30 திருநங்கைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,276 பேருக்கும், செங்கல்பட்டில் 162 பேருக்கும், திருவள்ளூரில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும், மதுரையில் 27 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 25,413 மாதிரிகள் ஒரே நாளில் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.