தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

0
Corona
Corona

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல் அளிக்கும் தகவலாக இன்று 633 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்து உள்ளது.

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் – 30,152
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 251
  • அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் – 74

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 95 பேருக்கு (மொத்த பாதிப்பு – 1,719), திருவள்ளூரில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 1,214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து வந்த 35 பேருக்கு காரோண உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here