தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சமின்றி வெளியில் போவதும், கடைகளில் கூட்டம் அலைமோதுவது என இயல்பு நிலை திரும்பியது. இதன் விளைவாக கொரோனா வைரஸ் தொற்று வீரியம் அடைந்து அதிகமானோருக்கு பரவியது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தற்போது மதுரை மாவட்டத்திலும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ஜூன் 24 காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்ததை குறைப்பது எப்படி?
அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து ஆலசோனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு அடுத்து, மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் ஜூன் 30க்கு பிறகும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? குறித்தும் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.