தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,002
- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 53 (0.70%)
- இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 2,54,899
- அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 4,273
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,051 (25.60%) ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 90 பேர், திருவள்ளூரில் 97 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,421 ஆண்கள், 2,579 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது 5,895 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 12 வயதிற்கு கீழ் 427 பேர், 13 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 7023 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 552 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
- சென்னை – 4,371 பேர்
- கோவை – 146 பேர்
- திருப்பூர் – 114 பேர்
- திண்டுக்கல் – 109 பேர்
- ஈரோடு – 70 பேர்
- நெல்லை – 90 பேர்
- செங்கல்பட்டு – 356 பேர்
- நாமக்கல் – 77 பேர்
- திருச்சி – 65 பேர்
- திருவள்ளூர் – 440 பேர்
- மதுரை – 121 பேர்
- தேனி – 59 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |