தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 24 மணிநேரத்தில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 119 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுவரை 2,85,024 பேர்க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 4,690 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 6,488 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,27,575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!
ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அகற்றப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இன்று சென்னையில் 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,109 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் 126 மையங்களில் இதுவரை 29,75,657 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் விகிதம் 68.99% ஆக உள்ளது. இதுவரை 1,72,334 ஆண்கள், 1,12,663 பெண்கள், 27 திருநங்கைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.